வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் யாழில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்!

வலிந்து காணாமல் ஆக்கபபட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, 3 லட்சம் கையொப்பம் பெற்று ஐ.நாவிற்கு அனுப்பும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்தனர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டவர் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை இட்டனர்.


No comments