நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோமா ? பிரஜைகள் குழு

யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அமைதிப்படையாக இருப்பதாகவும், யாழ்ப்பாண மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாா்கள். எனவும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கூறிய கருத்தினை கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு மறுதலித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை ஒட்டி யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் தா்ஷன ஹெட்டியாராச்சி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அந்த வாழ்த்து செய்தியில் யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அமைதிப் படையாக இருந்து கொண் டிருப்பதாகவும், தமிழ் மக்கள் போருக்கு பின் உண்மையான, சுதந்திரத்தை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த வாழ்த்து செய்தியில் கூ றப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடா்பில் பிரஜைகள் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது.

யாழில் அமைதிப்படையாக இராணுவம், தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை போருக்குப் பின்னர் அனுபவித்து வருகின்றனர் என்ற இவரது கருத்து யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும். தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவத்தை நி லை நிறுத்துவதற்கான வெளிப்பாட்டின் செய்தியாகும்.

சுதந்திரம் பற்றிய நவீன சிந்தனைகள் கொள்கைகளின் உள்ளார்ந்த உணர்வுகளை தத்துவங்க ளை ஏற்றுக்கொள்ளாததன் ஒரு குறியீடாகவே இவரது வாழ்த்துச் செய்தி அமைந்திருக்கின்றது.  2009இற்கு முற்பட்ட யுத்த சூழலிலும் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படவில்லை. இவர் குறிப் பிட்ட 30 வருட காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு சிறப்புற்றிருந்தது.

அவர்களது சுதந்திரம் கௌரவம் என்பன பாதுகாக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் தாங்கள் அனுபவித்த சுதந்திரத்தையும் கௌரவத்தையும் 2009இற்குப் பின்னர் படிப்படியாக இழந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். தமது தாயக பூமியில் தமது குடியியல் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமுதாயச் சுதந்திரம், தேசியச் சுதந்திரம் மற்றும் இயற்கைச் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத் தப்பட்ட ஓர் இனமாக அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இதில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக இராணுவம் உள்ளது. யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் ஆகியும் தமது பூர் வீக நிலத்தில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலையில் இராணுவத்தினர் அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பதே உண்மையாகும். யுத்தத்திற்கு பிற்பாடு வெள்ளை வான் கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுதலும், கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதனை தமிழ் மக்கள் மறக்கவில்லை. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பின் வடிவமாக பௌத்த விகாரைகளை இராணுவம் அமைத்ததனை தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இவ்வாறனதொரு புறச் சூழலில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொரு வாழ்த்துச் செய்தியாகும் என்பதனை கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டுவதுடன் அச் செய்தியினை முற்றாக மறுத்து இம் மறுப்பு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments