யாழில் போலி குடிநீர் விநியோகம் - 6 ஆயிரம் போத்தல்களை அழிக்க நீதிமன்று உத்தரவு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த கெடிநீர்ப் போத்தல்களை கடந்த நவம்பர் 2ம் திகதி கைப்பற்றி நீதி மன்றில் முற்படுத்திய 6 ஆயிரத்து 800 போத்தலையும் அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடி சோதனை நடாத்தினர். இதன்போது குடிநீர்ப்போத்தலில் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் அதன் மேலே மற்றுமோர் போலி இலக்கம் ஒட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரத்து 800 குடிநீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள் கைப்பற்றி அவற்றினை உடனடியாகவே யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
குறித்த குடிநீர் போத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டே ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார் மேற்படி வழக்கினை ஆராய்ந்த நீதிபதி சதீஸ்கரன் குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபரிற்கு அழைப்பானை அனுப்புமாறும் அதுவரை சான்றுப்பொருட்கனை மன்றில் தடுத்துவைத்ததோடு மாவட்ட விநியோகஸ்தரான 2ம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கட்டிருந்த்து.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கில் பிரதான சந்தேக நபர்களும் மன்றில் தோன்றிய நிலையில் கடந்த 25ம் திகதி யாழ்ப்பாணம் மேலதி நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது. இதன்போது வழக்கினை ஆராய்ந்த நீதிவான் காயித்திரி - சைலவன் குடிநீர்ப் போத்தல்கள் அனைத்தையும் அழிக்கெமாறும் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும். என தீர்ப்பளித்தார்.
Post a Comment