தனியே போனது என்ஜின்! பெட்டிப் பிணைப்புகள் அறுந்தது!

இலங்கை புகையிரதத்திணைக்களம் தனது சேவையில் பல அதிரடிகளை செய்வது வழமையாகும்.அதன் புதிய சாதனையாக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகளின் பிணைப்புகள் திடீரென அறுந்த பரிதாபம் இன்று நடந்துள்ளது.இதனால் பெட்டிகள் வேறாகி, ரயில் நிறுத்தப்பட்டது.

இதனால் ரயிலில் பயணித்த மக்கள் அநாதரவாக கைவிடப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே தண்டவாளத்தை விட்டு புகையிரதத்தை செலுத்தி சாதனை புரிந்த புகையிரத திணைக்களம் தற்போது பெட்டிகளை தனியாக கைவிட்ட சாதனை நடந்துள்ளது.

எனினும் இன்றைய சம்பவத்தில் மனித உயிர்களிற்கான பாதிப்புகள் ஏதும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments