கஞ்சா வியாபாரியை காப்பாற்றிய சுமந்திரன் ?


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சாவுடன் அகப்பட்ட தனது ஆதரவாளர் ஒருவரை விடுவிக்க காவல்துறைக்கு அழுத்தங்கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

அண்மையில் பெருமளவு கஞ்சாவுடன் பளைப் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவர்  பொலிஸாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.எனினும் பின்னர் சுற்றிவளைப்பின் மூலம் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருடன் சமரசம் செய்து நீதிமன்ற வழக்கு எதுவுமின்றி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக இன்றைய கொழும்பு ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரது சாரதியின் சகோதரரே இவ்வாறு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு அகப்பட்டுள்ளார்.

இதனிடையே ஏற்கனவே மன்னாரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தொடர்பில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி வந்திருந்த நிலையில் தற்போது பகிரங்கமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

No comments