மகிழுந்து விபத்தில் உயிர் தப்பினார் இளவரசர் பிலிப்!!

பிரித்தானியா ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளாகியதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்  இளவரசர் பிலிப்.

இங்கிலாந்தின் கிழக்கே உள்ள சண்டிரிங்கம் (Sandringham) எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இளவரசர் பிலிப் தனது மகிழுந்தை பிரதான சாலைக்கு எடுத்து வரும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு மகிழுந்து மோதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய மற்றொரு மகிழுந்தில் இருந்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

விபத்தில் லாண்ட்ரோவர் மகிழுந்து சாலையின் ஓரத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளது. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Prince Philip



No comments