இலங்கை கடற்படை கடுமையாகத் தாக்கியது


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ள கடற்படையினர் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஐகதாப்பட்டனத்திலிருந்து கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மேற்படி இரு படகுககளையும் ஒன்பது பேரையுமே கடற்படையினர் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கேசன் துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்றையதினம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் தங்கள் மீது தாக்தல் நடத்தியே தம்மைக் கைதுசெய்துள்ளதாகவும் கவலையுடன் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments