இந்திய மீனவர்கள் விடுதலை?


இலங்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (23) விடுதலை செய்தது.
தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன்பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக படகு சேதமடைந்த நிலையில், 6 மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 6 மீனவர்களும் இன்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 6 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

No comments