டெங்கு மாவட்டம் - யாழிற்கு 4 ஆம் இடம்

வடமாகாணத்தில் 2018ம் ஆண்டு அதிகளவான டெங்கு நோயாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள தாக  சுகாதார அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 4058 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு 51448 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கொழு்ம்பில் 10261 நோயாளர்களும், கம்பாகாவில் 5836 பேரும், மட்டகளப்பில் 4843 பேரும், யாழ்ப்பாணத்தில் 4058 பேரும், கண்டியில் 3828 பேரும், களுத்துறையில் 3103 பேரும், என அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன. வடக்கில் ஏனைய மாவட்டங்களான வவுனியாவில் 597 பேரும், கிளிநொச்சியில் 342 பேரும்இ மன்னார் மாவட்டத்தில் 223 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களான இனம் காணப்பட்டுள்ளனர்.

No comments