சாவகச்சேரியில் அபிவிருத்தியை தடுத்து நிறுத்தும் சயந்தன்
சாவகச்சேரிப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் தன்னை மீறி நடந்து விடக் கூடாது என்ற வகையில் அவற்றுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தடங்கல் ஏற்படுத்துகின்றார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
கொடிகாமத்தில் 4 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இடைபுகுந்து தடங்கலை ஏற்படுத்தியதுடன், அதனை முன்னெடுத்த உள்ளுராட்சிச் சபை உறுப்பினரை சயந்தன் மிரட்டினார் என்று இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குருவிச்சான் வீதி, கொலனி முதலாம் வீதி, ஒட்டங்கேணி போக்கட்டி வீதி, கொடிகாமம் – கச்சாய் ஊர் எல்லைத் தெரு ஆகியவற்றை அபிவிருத்தி செய்து தருமாறு அந்தப் பகுதி மக்களாலும், அவர்களுடைய உள்ளூராட்சி சபைப் பிரதிநிதியாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவற்றின் மறுசீரமைப்புக்கான உத்தேச மதிப்பீட்டை வழங்கினால் கொழும்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பேச்சு நடத்தி அவற்றுக்கான உதவியைப் பெற்றுத் தரமுடியும் என்று உறுதியளித்திருந்தார்.
மக்கள் சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துச் சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பு எடுத்த மாகாணசபை உறுப்பினர் சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஊடாக அபிவிருத்திப் பணிகளைச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்ய முற்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக அதனை நிறுத்துவேன் என்று குறிப்பிட்டார்.
கொடிகாமத்தில் 4 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இடைபுகுந்து தடங்கலை ஏற்படுத்தியதுடன், அதனை முன்னெடுத்த உள்ளுராட்சிச் சபை உறுப்பினரை சயந்தன் மிரட்டினார் என்று இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குருவிச்சான் வீதி, கொலனி முதலாம் வீதி, ஒட்டங்கேணி போக்கட்டி வீதி, கொடிகாமம் – கச்சாய் ஊர் எல்லைத் தெரு ஆகியவற்றை அபிவிருத்தி செய்து தருமாறு அந்தப் பகுதி மக்களாலும், அவர்களுடைய உள்ளூராட்சி சபைப் பிரதிநிதியாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவற்றின் மறுசீரமைப்புக்கான உத்தேச மதிப்பீட்டை வழங்கினால் கொழும்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பேச்சு நடத்தி அவற்றுக்கான உதவியைப் பெற்றுத் தரமுடியும் என்று உறுதியளித்திருந்தார்.
மக்கள் சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துச் சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பு எடுத்த மாகாணசபை உறுப்பினர் சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஊடாக அபிவிருத்திப் பணிகளைச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்ய முற்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக அதனை நிறுத்துவேன் என்று குறிப்பிட்டார்.
Post a Comment