இரண்டு ஆண்டுகளில் 12 ஆயிரம்?



வடக்கில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளில் ஈடும் ஸார்ப் தொண்டு நிறுவனத்தால் கடந்த 2 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பணிகளில் 12 ஆயிரத்து 452 அபாயகரமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் இன்று (3) அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 

வடபகுதியில் கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த நவம்பர் 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதிகளிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் 6 இலட்சத்து 67 ஆயிரத்து 431 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 12 ஆயிரத்து 452 அபாயகரமான வெடிபொருள் அகற்றப்பட்டுள்ளன.


தற்போது நான்கு அணிகள் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலைப் பகுதியில் முன்னெடுத்து வருகின்றன என்று ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார் – என்றுள்ளது.

No comments