ஆமி தொடர்ந்தும் தேவை:சாள்ஸ் நிர்மலநாதன்!


வடக்கில் இராணுவ பிரசன்னத்தை பேண இலங்கை அரசு பாடுபட அதற்கு முண்டுகொடுக்க கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது.அவ்வகையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கூடாதென புதிய கோசத்துடன் நல்லாட்சியின் பங்காளியான கூட்டமைப்பு கருத்துக்களை வெளியிட தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தேவையானால் இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை மாத்திரம் விடுவித்தால் போதுமெனவும் தெரிவித்துள்ளார்.

அரச காணிகளோ அல்லது பொதுமக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளிலோ இராணுவம் அதன் படைமுகாமை வைத்திருப்பதற்கு தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments