திங்கள் வரை மழை நீடிக்கும் !

இலங்கைக்கு தென்கிழக்கில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளதால் வடக்கு – கிழக்கு உள்பட நாட்டின் சில பாகங்களில் வரும் திங்கட்கிழமை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என்று சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

 இலங்கையின் வடக்கு-கிழக்கு, தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக ஆகிய பகுதிகளில் மழையுடனான காலநிலை வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வடக்கில் கடந்த 48 மணிநேரத்தில் இந்த ஆண்டின் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments