மைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது  விழா திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக, கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இநத நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் மூத்த கலைஞரான ஜயசிறிக்கும் கலாபூசண விருது கிடைக்கவிருந்ததாக தெரியவருகின்றது.

கலாசார திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விருது விழாவில் பற்கேற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கையால் விருதைப் பெற மாட்டேன் என்றும் டப்ளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments