கஞ்சாவுடன் கைதான இளைஞன் பொலிஸ் நிலையத்தில் கொலை ?

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட 26 வயதான இளைஞர் ஒருவர் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நேற்று கைதுசெய்யப்பட்டார் எனவும், அதன்போது குறித்த இளைஞரிடம் ஒரு கிராம் கஞ்சா இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments