மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள்


மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியிலிருந்து 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 111ஆவது நாளாக மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் ,ருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதன் காரணத்தினால் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

No comments