மட்டக்களப்பு – கூழாவடிப் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

மட்டக்களப்பு – கூழாவடிப் பகுதியில் இன்று அதிகாலை புகையிரதத்துடன் மோதுண்ட ஆணொருவரின் சடலம் அங்கங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – மட்டக்களப்பு இரவு நேர புகையிரதம் அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு நகர புகையிரத நிலையத்தை நெருங்கும்போது கூழாவடிப் பகுதியில் குறித்த நபர் தொடருந்துடன் மோதுண்டுள்ளார்.

தலை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உருக்குலைந்த சடலத்தினருகே டோர்ச் லைற் ஒன்றும் கிடைத்தது என்று சடலத்தை மீட்டவர்கள் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments