எம் தலைவரின் பிறந்த தினத்தில் அவரைப் போற்றியே வாழ்த்துவோம் - ந. கிருஷ்ணசிங்கம்
தாயீழம் காப்பதொன்றே தம்திடமெனக்
கருதிய மனமொத்த சிலரோடு சேர்ந்து
சீறும் நீரலையிலும் நிலத்திலும் சேனை
நிரைகள் நிரவிப் பேயகத்தார் எதிரியர்
பிறங்காண வைக்கவே ஏவு பெரும்போர்
ஆயுதங்கள் பீரங்கிகள் ஆயவெகுவிசை
படகுகள் நீர்மூழ்கிகள் போர்க்கப்பல்கள்
ஆகாயவிமானங்கள் என்று அத்தனையும்
திரட்டிய தலைவரையும் மாவீரர்களையும்
அவர்கள் போராடியவீர வரலாறுகளையும்
மீளவும் நினைந்து வியந்து நிமிர்வோம்.
ஆயின் இன்று எமது ஈழமா தாயகத்தில்
அறங்காக்க ஒருவரின்றி அவலங்கள்பட்டு
எந்நாளும் எந்நேரமும் உலையும் மக்கள்
உறங்காத இரவும் பயமேவிய பகலுமென
வாழ்வது என்ன ஒர் பிழைப்போ என்றுமே
விரக்தி நிறைந்தவராய் விழிகள் சிவந்து
சினந்துசுகமிழந்து செத்தேபோகின்றார்கள்.
பள்ளிகளுக்குச் செல்லும் சிறுமியற்குக்கூட
பாதுகாப்பு இல்லாத படுபாதக இழப்புகள்
பற்பலவுமங்கே இயல்பாகிப் போனதினால்..
கலங்கும் எம்மவர்ரைக் காவுகொள்வோரை
அச்சுறுத்தி அடக்க யாருமில்லா வாழ்வில்
போர்க்களத்தில் தொலைந்த எம்மன்னவன்
மீண்டும் தேரேறியே வரவேண்டும் என்றுமே
எதிர்பார்ப்பவராய் இருண்டதம் இதயத்துள்
ஒளிவிளக்காய்த் தெரியும் பிரபாகரன் என்ற
பிரகாசத்தைக் கண்டு தொழும் எம்மக்கள்
பெருக்கோடு இணைந்த யாம் மாதலைவன்
பிரபாகரன் பிறந்த மாதம் திருக்கார்த்திகை
இருபத்தாறில் ஆர்த்து எழுந்த ஆவலோடு..
அவரை, நெஞ்சிலிருத்தி வாழ்த்துவோமாக!
கருதிய மனமொத்த சிலரோடு சேர்ந்து
சீறும் நீரலையிலும் நிலத்திலும் சேனை
நிரைகள் நிரவிப் பேயகத்தார் எதிரியர்
பிறங்காண வைக்கவே ஏவு பெரும்போர்
ஆயுதங்கள் பீரங்கிகள் ஆயவெகுவிசை
படகுகள் நீர்மூழ்கிகள் போர்க்கப்பல்கள்
ஆகாயவிமானங்கள் என்று அத்தனையும்
திரட்டிய தலைவரையும் மாவீரர்களையும்
அவர்கள் போராடியவீர வரலாறுகளையும்
மீளவும் நினைந்து வியந்து நிமிர்வோம்.
ஆயின் இன்று எமது ஈழமா தாயகத்தில்
அறங்காக்க ஒருவரின்றி அவலங்கள்பட்டு
எந்நாளும் எந்நேரமும் உலையும் மக்கள்
உறங்காத இரவும் பயமேவிய பகலுமென
வாழ்வது என்ன ஒர் பிழைப்போ என்றுமே
விரக்தி நிறைந்தவராய் விழிகள் சிவந்து
சினந்துசுகமிழந்து செத்தேபோகின்றார்கள்.
பள்ளிகளுக்குச் செல்லும் சிறுமியற்குக்கூட
பாதுகாப்பு இல்லாத படுபாதக இழப்புகள்
பற்பலவுமங்கே இயல்பாகிப் போனதினால்..
கலங்கும் எம்மவர்ரைக் காவுகொள்வோரை
அச்சுறுத்தி அடக்க யாருமில்லா வாழ்வில்
போர்க்களத்தில் தொலைந்த எம்மன்னவன்
மீண்டும் தேரேறியே வரவேண்டும் என்றுமே
எதிர்பார்ப்பவராய் இருண்டதம் இதயத்துள்
ஒளிவிளக்காய்த் தெரியும் பிரபாகரன் என்ற
பிரகாசத்தைக் கண்டு தொழும் எம்மக்கள்
பெருக்கோடு இணைந்த யாம் மாதலைவன்
பிரபாகரன் பிறந்த மாதம் திருக்கார்த்திகை
இருபத்தாறில் ஆர்த்து எழுந்த ஆவலோடு..
அவரை, நெஞ்சிலிருத்தி வாழ்த்துவோமாக!
Post a Comment