தொடரும் மழை: வடக்கில் வெள்ள அபாயம்!

மழையுடனான வானிலையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், வடக்கில் 436 குடும்பங்களைச் சேர்ந்த, 1,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால், கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படும் அதேவேளை, முல்லைத்தீவு,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல குடும்பங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முல்லைத்தீவில் குளம் ஒன்று உடைந்தமையால், சிக்கிக்கொண்ட ஆறுபேரை, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான, எம்ஐ17 ஹெலிக்கொப்டர் ஊடாக மீட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.

No comments