ஜனாதிபதி செயலகம் வீடு , முற்றுகை?


புதிய அரசாங்கத்துக்கு எதிராக பிராந்திய ரீதியாக நடைபெறும் கூட்டங்கள் மூலம் மக்களை அறிவுறுத்தி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டையும் முற்றுகையிட்டு மக்கள் சக்தியை நாம் காட்டுவோம் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கண்டி நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இன்று (24) நடைபெற்ற ஐ.தே. கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் தான் உள்ளன. மீண்டும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம் என்ற செய்தியுடனே நாம் கண்டிக்கு வருவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments