யாழ் சிறுவர் நீதிமன்று அருகில் 4 கிலோ வெடிபொருட்கள் மீட்பு

யாழில். சட்டவிரோத மீன் பிடிக்குப் பயன்னடுத்துவதாகக் கூறப்படும் 4 கிலோ ரி.என்.ரி. வகை வெடிமருந்துக்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

யாழ்.சிறுவர் நீதிமன்றுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று காணப்படுவதாக யாழ்.பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்துகள் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டு உள்ளன.

மீட்கப்பட்ட வெடி மருந்துக்களை யாழ்ப்பாண பொலிசாரிடம் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். அதனை அடுத்து யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அதவேளை மீட்கப்பட்ட வெடிமருந்துகள் சட்டவிரோத மீன் பிடிக்கு பயன்படுத்தும் நோக்குடன், கொண்டு செல்வதற்காக அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments