கட்சித்தலைமையை கைப்பற்ற தயாராகும் சஜித் பிரேமதாச
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ”சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயார்.
கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்பற்றுவதற்கு நான் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment