மைத்திரியின் கூட்டம் இரத்து!


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார். எனினும், அந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பதனால், அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இன்று (13) கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவிருக்கும் விசேட கூட்டத்துக்கே, அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் 341 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments