ஜனாதிபதி கொலைகாரர்களுடன் இணைந்துவிட்டார்

ஜனாதிபதி அரசமைப்பை மீறிச் செயற்படுவதுடன், கொலைகாரர்களுடன் இணைந்து பயணிக்கின்றார். நாம் அன்று அமைச்சரவையிலிருந்து வெளியேறிய போது, கனவில் கூட நினைக்கவில்லை இவ்வாறு நடக்குமென்று என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இல்லாத அதிகாரத்தையும் செயற்படுத்துகிறாரென தெரிவித்துள்ள அவர்,

இவ்வாறு செயற்படுவதற்கல்ல நாம் அவரை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கினோம் என்றும் தெரிவித்துள்ள அவர், இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார் இல்லையென்று நாம் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், இன்று தனக்கு இல்லாத அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துகிறாரென ராஜித தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தாலும் நாம் நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை உறுதி செய்து அதனை சரியான முறையில் கொண்டு செல்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments