மகிந்த அணியுடன் புளொட் பேரம்


தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுடன் பேரம் பேசப்பட்டதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்தார்த்தனின் கொழும்பு இல்லத்தில் நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கும் புளொட் அமைப்பிற்குமிடையில் பேரம் பேசல் இடம்பெற்றுள்ளது. இதன்போது  வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு நாமல் ராஜபக்ச கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாமலுடன் தாங்கள்  சந்திப்பு அரசியல் ரீதியான பேரம் பேசலாகவே அமைந்ததாகவும், பணத்தை மையப்படுத்தி அவர் தன்னிடம் பேரம் பேசவில்லை என்றும் சித்தார்த்தன் கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு குறிப்பிட்டிருக்கிறார்.

No comments