மைத்திரியின் கீழேயே காவல்துறையாம்?


இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற உறுதியான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமையவே காவல் திணைக்களம் செயற்படுமென, காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேநேரம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமையவே காவல்துறை செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜக்கிய தேசியக்கட்சி சார்பு முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று தாம் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருப்பதை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அவ்வகையில் தமக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி இன்று காவல்துறை தலைமையகம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments