மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு ஜனவரி 14 க்கு ஒத்திவைப்பு


மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனைகள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று (23) விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த விசாரனைக்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

மாந்தை மனித புதை குழி தொடர்பான வழங்கு விசாரணையின் போது காணாமல்போன உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மேலும் தெரிவிக்கையில், மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை இன்று விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதோடு தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்தது.

குறித்த வழக்கு B/778-2013 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வந்தன.

இதன் போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்ற அடிப்படையில் அந்த மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடனர் தரப்பிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக் கொண்டு, நீதிபதி தீர்ப்பை வழங்க இருந்தார்.

ஆனால் இன்று தினம் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் மன்னார் நீதவான் ரி. சரவணராஜா இன்று விடுமுறையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இன்று பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணை இடப்பட்டது.

குறித்த வழக்கு விசாரனைக்காக மன்றில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நவாவி பிரசன்னமாகி இருந்ததோடு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments