மகிந்தவின் நியமனத்தை ஐ.தே.க ஏற்றது என்கிறார் மகிந்த அமரவீர


மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தமையானது, அரசமைப்புப் பிரகாரம் இடம்பெற்றுள்ளது என்பதை, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே தெரிவுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியதகவும் கூறப்பட்டுள்ளது.

No comments