மஹிந்த பிரதமரல்ல: ஜதேக விடாப்பிடி!
பிரதமர் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்ச நாளை நாடாளுமன்றில் உரையாற்றுவதை ஏற்றுகொள்ள ஐக்கிய தேசிய கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மகிந்த சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்பட முடியுமெனவும் ஜக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற பெரும்பான்மை குறித்து சபாநாயகர் அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுதலித்துள்ளார்.
இந்நிலையில் நாளை சபையில் மஹிந்த விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளதாகவும் அது பிரதமர் பதவியை தொடரும் முடிவா இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் நாடாளுமன்ற ஒத்திவைப்பு யோசனையை மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதி தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
ரணிலுக்கு பதிலாக ஜக்கிய தேசியக்கட்சி வேறு ஒருவரை பிரதமராக முன்னிறுத்த மைத்திரி கோரியிருப்பதாகவும் அதன் மூலம் இணக்க நிலையினை தோற்றுவிக்க சம்மதித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் மஹிந்தவுக்கு எதிராகவே எதிர்தரப்பு ஆதரவுடன் 122 வாக்குகள் கிடைக்கும்.ஆனால் ரணிலை ஆதரித்து 102 வாக்குகள் மட்டுமே இருப்பதால் உருவானது புதிய சர்ச்சையே இதுவாகும்.அதிலும் குறிப்பாக கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி பகிரங்கமாக ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்க நேரடி ஆதரவு வழங்காதென்பது வெளிப்படையாகும்.
Post a Comment