ஜனாதிபதி கொலைச்சதி - முக்கிய இரகசியங்களை வெளியிடப்போவதாக அறிவிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பல இரகசிய தகவல்கள் இன்னும் சிலநாட்களில் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரான  மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் மேற்கண்ட தகவலை வெளியிட்டனர்.

No comments