நாடாளுமன்றம் கலைப்பு! அரசமைப்புக்கு அமைவானது! சட்டாமா அதிபர்

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறும் சட்டமா அதிபர்  ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி கலைத்தமையானது அரசமைப்பை மீறும் நடவடிக்கையென தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments