நெருக்கடியை தவிர்க்க நேரகாலத்துடன் வாருங்கள்!


தமிழீழ மாவீரர் தின நினைவேந்தல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்களை நேர காலத்துடன் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பதாக சமூகமளிக்க மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தேசியநினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் தாயகத்தின் பல பகுதிகளிலும் மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள இராசவீதியில் உள்ள காணி ஒன்றில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் அனைத்துமாவீரர் குடும்ப அங்கத்தவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,தமிழ்த் தேசமக்கள்,முன்னாள் போராளிகள்,பொதுமக்கள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பவர்கள்,ஊடகநண்பர்கள், பொதுஅமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் மாவீரச் செல்வங்களுக்குவணக்கம் செலுத்த அணிதிரளமாறு மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அன்றைய தின நெருசலை தவிர்க்கவே மாலை 5.00 மணிக்கு முன்னர் அனைவரையும் திரண்டு வருகைதர நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அழைப்புவிடுத்துள்ளது.

No comments