தீபாவளியும் வந்துவிட்டது!! சம்பந்தனின் வாக்குறுதி பொய்யாகியது!


ஜனாதிபதி மீதான நம்பிக்கையில், தீர்வு முயற்சிகளின் மீதான நம்பிக்கையிலேயே தீபாவளி காலத்தில் தீர்வு தருவதாக கூறினோமென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.நம்பிக்கையுடன் தான் இந்த முயற்சிகளை செய்யலாம். இன்னொரு தரப்புடன் அவநம்பிக்கையுடன் இந்த கருமங்களை ஆற்ற முடியாது. அந்த அடிப்படையிலேயே, தீபாவளியில் தீர்வுபற்றிய நம்பிக்கையை வெளியிட்டிருந்தோம். இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என இப்பொழுதும் மன்றாட்டமாக கேட்கிறேன் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும், தொலைபேசியில் அழைக்கும் சம்பந்தன் தீர்வு திட்டம் குறித்து என்னை வலியுறுத்துவார். இனப்பிரச்சனை தீர்வு முயற்சியில் அவர் அதிக அக்கறையுடன் இருக்கிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

இதனிடையே புதிய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments