முதலமைச்சர் ஒற்றையாளாகவும் தயார்: வரவேற்கின்றன சுவரொட்டிகள்!



கூட்டுக்கள் குழப்பமுற்றால் தனித்து பயணிக்க வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தயாராகிவிட்டார்.இந்நிலையில் அவரை வரவேற்று கிளிநொச்சியில் பல இடங்களிலும் இன்று (05) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் தேசியத்தின் காவலனே என விழிக்கப்பட்டு அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடக்கு முதலமைச்சராக பதவி வகித்த க.வி.விக்னேஸ்வரன், கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றிற்கான அறிவித்தலை விடுத்தார்.

இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது. சில நாட்கள் பரபரப்பாக இந்த விடயம் பேசப்பட்ட நிலையில், ஒக்ரோபர் 26 பிரதமர் மாற்றம் அனைத்து விடயங்களையும் மேவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்;டும் கூட்டமைப்பின் கட்சி பாய்ச்சல் மற்றும் தெற்கிற்கு முண்டு கொடுக்கும் அரசியல் முன்னாள் முதலமைச்சரை மக்களை தேடவைத்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றார். பிடிக்க ஆரம்பித்துள்ளன.

இன்றைய தினம் கிளிநொச்சியில் பரவலாக முதலமைச்சருக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் என சுவரொட்டியின் கீழ் குறிப்பிட்டே அவை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே இயலுமானவரை கட்சிகளினை கூட்டிணைத்து செல்ல முதலமைச்சர் முற்பட்டுள்ள போதும் தற்போதைய முன்னணியின் கருத்துக்களை தொடர்ந்து தனித்து பயணிப்பது பற்றியும் முதலமைச்சர் தயாராகியிருப்பதாக தெரியவருகின்றது.

No comments