சம்பந்தனுக்கு சாணக்கியமில்லை! கருணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும் கடந்த அரச தலைவர் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள்தனமான நடவடிக்கையை எவரும் முன்னெடுக்க மாட்டார்கள். இவ்வாறு கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கூட்டமைப்பினர் உண்மையில் மக்களுக்காகச் செயற்படுபவர்களாக இருந்தால் அவர்கள் தமது பதவிகளையும் சலுகைகளையும் மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து தமது சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மகிந்த குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். இதற்கு கூட்டமைப்பினரும் உடந்தையாக இருந்தனர். இவர்களது ஆட்சியில் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரு விடயத்தையாவது இவர்களால் பெருமையாகக் கூறமுடியுமா?
வட மாகாணசபையைக் கூட இவர்களால் ஒற்றுமையுடன் திறமையாக நடத்த முடியவில்லை. இவர்களது ஆட்சியில் மத்திய வங்கிக் கொள்ளை, விலைவாசி உயர்வு போன்ற பல விடயங்கள் நாட்டைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றுள்ளன.
தற்போது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் முன்னாள் அரச தலைவர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கருணோ மேலும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கூட்டமைப்பினர் உண்மையில் மக்களுக்காகச் செயற்படுபவர்களாக இருந்தால் அவர்கள் தமது பதவிகளையும் சலுகைகளையும் மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து தமது சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் சலுகைகளை அனுபவித்த கூட்டமைப்பை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மகிந்த குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். இதற்கு கூட்டமைப்பினரும் உடந்தையாக இருந்தனர். இவர்களது ஆட்சியில் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரு விடயத்தையாவது இவர்களால் பெருமையாகக் கூறமுடியுமா?
வட மாகாணசபையைக் கூட இவர்களால் ஒற்றுமையுடன் திறமையாக நடத்த முடியவில்லை. இவர்களது ஆட்சியில் மத்திய வங்கிக் கொள்ளை, விலைவாசி உயர்வு போன்ற பல விடயங்கள் நாட்டைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றுள்ளன.
தற்போது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் முன்னாள் அரச தலைவர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கருணோ மேலும் கூறியுள்ளார்.
Post a Comment