டக்ளஸ் மீண்டும் கதிரையேறினார்!
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஈபிடிபி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவியேறுள்ளார்.
முன்னதாக அமைச்சர் சுவாமிநாதன் வகித்த அமைச்சே தற்போது டக்ளஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் இதே போன்று அமைச்சரான நிலையில் பிறப்பித்த உத்தரவையடுத்து ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே ஈபிடிபி அமைப்பின் சிறீதர் திரையரங்க அலுவலகம் முன் இன்றிரவு ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
Post a Comment