வல்வெட்டித்துறை மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழுவுக்கு பொலிசார் மிரட்டல்


மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழுவை வல்வெட்டித்துறைப் பொலிஸார் அழைத்து மிரட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு தீருவில் வெளியில்  மாவீர்ர் நாளை முன்னின்று நடத்திய ஏற்ப்பாட்டாளர்களை, வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்றைய தினம்  தொலைபேசி மூலமாக  விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

அவர்களிற்கான விசாரணைக்கு இன்று நேரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸ் நிலையத்திற்கு சென்றவர்களை நிலைய பொறுப்பதிகாரி கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை நீங்கள் தானே முன்னெடுத்தீர்கள், இவ் வருடம் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் தண்டணை வழங்கவேண்டிவரும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்துக் கொண்டு இருங்கள் என அச்சுறுத்தி அனுப்பியுள்ளனர்.

இதில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரையும் பொலிஸார்  அழைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இச் சம்பவமானது வல்வெட்டித்துறை வாழ் மக்களை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments