கொழும்பில் தினம் துப்பாக்கிச்சூடு - இன்றும் ஒருவர் பலி


கொழும்பில் தொடர்ச்சியாக தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. நேற்று முன்னதினம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்று அங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதுடைய ராஜகிரிய, கலபழுவாவ பிரதேசத்தைச் ​சேர்ந்த தாரக இரோசன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவிஸ்ஸாவளை வீதியில் இன்று மாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments