மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு


மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நிறைவடைவதுடன் குறித்த மாகாணம் ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 4 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் வடமேல் மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் மாதம் தென் மாகாணத்தினதும் 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஆயுட்காலம் நிறைவடைந்த மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இதுவரையில் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க மேலும் சில தினங்கள் செல்லும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments