யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!


தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யக்கோரியும் யாழ்.பல்லைக்கழக மாணவ சமூகம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று நடத்தியுள்ளது.இன்று 8ம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 அளவில் குறித்த அடையாள கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக நுழைவாயில் திரண்ட மாணவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நாளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடைபயணமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து புறப்படுகின்ற கவனயீர்ப்பு நடைபயணம் ஏ-9 வீதியினூடாக அனுராதபுரம் சிறையினை சென்றடையவுள்ளது.

குறித்த நடைபயணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,மாணவிகள் இணைந்து பயணிக்கவுள்ள நிலையில் வீதியெங்கும் அவர்களுடன் அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,மதத்தலைவர்கள் என பலரும் இணைந்து பயணிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் குறித்த நடைபயண பேரணி முக்கிய நகரங்கள் தோறும் மக்களை அணிதிரட்டுவதில் ஈடுபடவுள்ளது.

No comments