சங்குப்பிட்டிப் பாலத்தில் தடம்பிரண்டது பேருந்து - பலருக்கு காயம்


யாழ்ப்பாணம்- முழங்காவில் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று மதியம் கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேற்படி வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே சென்றதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந் த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலமாக யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்து இடம்பெற்றிருந்த போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படாது தெய்வீதீனமாக உயிர் தப்பியுள்ள தாகவும் தெரிய வருகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments