முச்சக்கரவண்டியில் யுவதி கடத்தல்?


யாழ்ப்பாணத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் யுவதியொருத்தி முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.கைதடியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோ ஒன்றினுள் யுவதியொருவர் பலாத்காரமாக கடத்திச்செல்லப்படுவதை வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவர் கண்டுள்ளார்.

அதனையடுத்து அவர் குறித்த முச்சக்கரவண்டியை தான் துரத்தி சென்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.அப்போது குறித்த முச்சக்கரவண்டி வேகமாக தப்பித்து சென்றிருந்ததாகவும் அதிலிருந்த பெண்கள் அணியும் உள்ளாடைகள் வீசப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமகன் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டியில் அதேவேளை மேலுமொரு பெண்ணுமிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments