பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!


வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றன. இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்.மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை 04ம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் நடாத்தப்பட்டிருந்தது.

யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஒழுங்கு செய்திருந்த  ஆர்ப்பாட்டத்தில், மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் ஆகியோரென 50 பேரிற்கும் குறைவானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

யுத்த காலங்களில் பலம் வாய்ந்த அமைப்பான இணையம் தற்போது வெறும் நிதியீட்டங்களை பெறுமொன்றாக செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments