ஜதேகவை ஆதரித்தால்தான் நின்மதியாக வாழ முடியுமாம் - மிரட்டும் விஜயகலா


இந்த நாட்டில் நீங்கள் நின்மதியாக வாழ வேண்டுமானால்  ஐ.தே.கட்சியையே ஆதரிக்க வேண்டும்  என  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பொதுமக்கள் மத்தியில் மிரட்டும் தொனியில் உரையாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் ஜனாதிபதி மக்கள் செயலணி நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அவர் அங்கு உரையாற்றும்போது,

“கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறுமையானவர்கள் இருக்கும்போது தகுதியற்றவர்களுக்கு  சமுர்த்தி வழங்கப்பட்டது. இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு மட்டுமே உங்களுக்கு நின்மதியான வாழை்வைத் தந்துள்ளது. ஏனெனில் கடந்த கால ஆட்சியில் யாழில் கானப்படும் வெற்றிடங்கள்கூட தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் மூலமே நிரப்பப்பட்டது. ஆனால் எனது ஆட்சியில் அவை தடுக்கப்பட்டது. எனவே தொடர்ந்து நீங்கள் நின்மதியாக வாழ ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்க வேண்டும்” - என்றார்.

No comments