சாவகச்சேரியில் துணிகர கொள்ளை!


தென்மராட்சிப்பகுதியில் இன்று காலை நடைபெற்ற துணிகரக்கொள்ளை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

சாவகச்சேரி நகரத்தில் ஏ-9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்தே இன்று காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். 

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான். உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments