நல்லூர் நாடகம் :முடிவுக்கு வந்தது?

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போன்று சுமந்திரன் தரப்பின் நாடகத்தின் இறுதிகட்ட காட்சியாக திலீபனின் நினைவேந்தல் யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில் திலீபனின் நினைவுதூபி அரசின் நிதியிலேயே கட்டப்படுவதாக வாதம் முன்வைக்கப்பட்டதால் நினைவேந்தல் நடத்த அனுமதிக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலின் பிரகாரமே காவல்துறையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் நாடகமொன்று அரங்கேற்றப்படுவதாக மூத்த போராளி காக்கா அவர்கள் நினைவுகூர்ந்துள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

No comments