முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேசத்திற்குப் பொறுப்பான வேணுகோபன்,

“குறித்த சம்பவம் நேற்று இரவு மேற்கெள்ளப்பட்டது. முன்னரும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவை சிறியளவிலான தாக்குதல் முயற்சி என நாங்கள் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. ஒருமுறை எமது அலுவகலப் பெயர்ப்பலகையின்மேல் இறந்த ஒருவரது கண்ணீரஞ்சலி பதாகையினை கொண்டுவந்து ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள்.

நாங்கள் சாவகச்சேரியில் பலமுள்ளவர்களாக இருக்கிறோம். தொடர்ச்சியாக இளைஞர்களைத் திரட்டி சமூகநல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். இதனைப் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்” - என்று தெரிவித்தார்.

No comments