கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு


கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 13ம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணை தமது உவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய புாதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார். குறித்த தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிசாரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை அண்மைக்காலமாக குடும்ப பெண்கள் வெளிநாடுகள் செல்வதும், காணாமல் போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களமு் தொடர்ந்தும் இடம்பெற்ற வரும் நிலையில், காணாமல் போன குறிதத் குடும்ப பெண் தொடர்பில் தகவல் கிடைக்குமிடத்து தந்துதவுமாகு குடும்பத்தினர் கோருகின்றனர்.

காணாமல் போன பெண் மருதநகர் பகுதியை செர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்ற குடும்ப பெண் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோருகின்றனர்.

No comments