தங்கையைத் தாக்க முயன்றவர்களைத் தடுத்த அக்காவிற்கு வாள்வெட்டு


மிரு­சு­வில், தவ­சிக்­கு­ளத்­தில் நேற்று தங்கை மீதான தாக்­கு­தல் முயற்­சி­யைத் தடுக்க முயன்ற அக்கா, வாள்வெட்டில் சிக்கி, வயிற்­றி­லும் கையி­லும் காய­ம­டைந்­தார்.

அவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். இவ­ரது தங்­கைக்­கும் அயல் வீட்­டி­ன­ருக்­கும் நேற்­று­முன்­தி­னம் வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது. அயல்­வீட்­டைச் சேர்ந்த 16 வய­துச் சிறு­வன் பெண்ணை வாள் கொண்டு அச்­சு­றுத்­தித் துரத்­தி­யுள்­ளார்.

அது தொடர்­பாக கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. நேற்­று­முன்­தி­னம் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்­ற­போது சிறு­வன் தலை­ம­றை­வா­கி­யி­ருந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.நேற்­றுக்­காலை மீண்­டும் கத்­தி­யு­டன் வந்த சிறு­வன் பொலிஸ் முறைப்­பாட்டை மீளப் பெறா­விட்­டால் வெட்­டு­வேன் என்று அச்­சு­றுத்­தி­னார் என்­றும், அத­னால் அச்­ச­டைந்த பெண் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தி­லும், கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­த­லும் முறைப்­பாடு செய்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­தைக் கேள்­விப்­பட்ட பெண்­ணின் அக்கா தங்­கை­யின் வீட்­டுக்­குச் சென்­றுள்­ளார். அந்­தச் சம­யம் அங்கு வந்த சிறு­வன் அயல்­வீட்­டுப் பெண்ணை வெட்ட முயன்­றுள்­ளார். அதைத் தடுக்க வந்த அக்கா காய­ம­டைந்­தார். வயிற்­றி­லும், கைக­ளி­லும் அவர் காய­ம­டைந்­தார்.

காய­ம­டைந்­த­வர் 43 வய­தா­ன­வர் என்­றும், 4 பிள்­ளை­க­ளின் தாய் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைக் கொடி­கா­மம் பொலி­ஸார் மேற்­கொண்­டுள்­ள­னர்.

No comments