கஞ்சா கடத்தல்காரர்களை விடுவிக்க 50 இலட்சம்?


வடமராட்சி கிழக்கில் கைப்பற்றப்பட்ட 119 கிலோ கிராம் கஞ்சாவை விடுவிக்க 50 இலட்சம் லஞ்சம் கோரியமை அம்பலமாகியுள்ளது.இதற்கான பேரம் படியாமையால் அதனை உடமையில் வைத்திருந்ததாக கூறி நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்தபோது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.எனினும் 80 பொதிகள் மீட்;கப்பட்ட நிலையில்  எஞ்சியவற்றிற்கு நடந்தது தொடர்பில் தகவல் இல்லாதுள்ளது.

இதனிடையே படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்று மாலை காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை, மன்னார், பாலாவியை சேர்ந்தவர்கள்   எனவும் , இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை கைமாற்றி எடுத்து வந்தபோதே அவர்களை கடற்படையினர் கைது செய்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இக்கடத்தலின் முக்கிய சூத்திரதாரியாக பிறேம் என்பவர் கைதாவதிலிருந்து தப்பித்துள்ளார்.குறித்த 50 இலட்ச பேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டாராவென சந்தேகம் எழுந்துள்ளது.

No comments